குருநாகல் நகரசபை தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை பிடியாணையைப் பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து கட்டிடம் ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் நிமித்தம் சட்டமா அதிபரினால் காவல்துறைமா அதிபருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ண அத்தகவலை வெளியிட்டுள்ளார்.